Home

Diamond Dadi

Contact Us



02 March, 2015  தாதியின் உறுதியான, மென்மையான, நேரடியனான மற்றும் அன்பான வழிக்காட்டல்கள் என்னுடைய ஆன்மீக வாழ்க்கையை பராமரித்துள்ளது

“நான் பாபாவின் அன்பான திருஷ்டி மற்றும் அவருடைய ஞான கடலின் மூலமும் இந்த பாதைக்கு கவரப்பட்டேன். ஆனால், அதன் பிறகு பரிட்சைகள் தொடங்கின. அதிருஷ்டவசமாக சவால்கள் வந்தபொழுதெல்லாம், என்னால் அவற்றை தாதியிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசிக்க முடிந்தது. அந்த நாட்களில், தாதியின் அறிவுரை மற்றும் பதில், fax மூலம் கிடைக்கும்.

ஒருமுறை, என்னுடைய வழக்கமான புகார்களுக்கு, தாதியிடமிருந்து ஒரு-வரியில் பதில் வந்தது. சென்டர் நடத்துபவர் எனக்கு பதிலின் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்தார் என்று நான் நினைத்துகொண்டேன். அதனால் அவரிடம் முழுவது கொடுக்குமாறு கேட்டேன். “அவ்வளவு தான்” என்று நேரடியாக கூறப்பட்டேன். அவ்வளவு தானா! என்று நினைத்தேன். சந்தேகத்துடன், முழு பதிலை கேட்டதற்கு, ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கிடைத்த பதிலை மீண்டும் படிக்க முடிவு செய்தேன். கடைசியாக எனக்கு பதில் கிடைத்தது.

என்னுடைய தாதி மிகுந்த அன்புடன், ஒரு காலவரையற்ற ஆசீர்வாதத்தை எனக்கு கொடுத்தார். நீ மாறிவிடுவாய் என்பதில் எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது” என்று தாதி எழுதி இருந்தார்.

இன்றுவரை தாதியின், காலங்கடந்த வார்த்தைகளும் அதிர்வலைகளும் என்னை பராமரிக்கின்றன.” 

விவேகமுடைய வார்த்தைகள்

“உள்ளிருந்து ஆழமான மாற்றத்தை கொண்டுவாருங்கள், அப்போது, உங்களின் கால்கள், நிலத்தை தொடாமல், நீங்கள், நான் யார், எனக்கு உரியவர் யார் என்ற விழிப்புணர்வில் சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். மற்றவர்களுக்கும் இதே அனுபவத்தை கொடுங்கள். நான் எங்கு சென்றாலும், அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றார்கள். மேன்மையான ஸ்திதியை வைத்திருங்கள். மேலும் சேவையை பற்றி எந்த பாரத்தையும் வைத்திருக்காதீர்கள்.

பாபா எவ்வாறு பகுத்தறிந்து முடிவு செய்யும் சக்தியை கொடுக்கின்றார் என்று தாதி பகிர்ந்துகொண்டிருந்தார்; அவர் நம்மை மாற்றி, உண்மைக்கும் பொய்க்கும், சரியானதற்கும் தவறானதற்கும், மேலும் அகிம்சையின் உண்மையான பொருளை நாம் உணர்ந்துக்கொள்ள செய்கின்றார். நாங்கள் அன்பினால் அவ்வளவு போதை கொள்வோம். அன்பு தான் நம்மை அவ்வளவு லேசானவர் ஆக்குகின்றது, இதன் மூலம் நாம் பறக்கின்றோம்.

அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆகிக்கொண்டிருக்கின்றோம், என்ற போதை நமக்கு இருக்கிறது. புத்தி நம்பிக்கையினால் நிறைந்துள்ளது; விதி நர்ணயிக்கபட்டுவிட்டது. இந்த படிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. முழுமையான நம்பிக்கை இருக்கும்போதும் நாம் வெற்றி பெறுவதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கு இல்லாதபோதும், நமக்கு படிப்பதில் சந்தோஷம் இருக்கும். நாடகத்தில் விதி ஏற்கெனவே நிச்சயமாகி உள்ளது. இவர் இது மாதிரி செய்ய கூடாது” அல்லது “அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்” போன்றவற்றை கூறாதீர்கள். நினைவில் இருக்கட்டும்: நாடகம் நிச்சயிக்கபட்டது.

திருஷ்டிக்கான கருத்து

கடவுளின் தூய சக்தியோடும் பார்வையோடும் என்னை நான் நேர்படுத்திக்கொள்கின்றேன். நான் அனைவரையும் அனைத்தையும் இந்த ஆக உயர்ந்த நிலையில் பார்க்கின்றேன். நான் மற்றவர்களை அவர்கள் தென்படுவதுபோல் பார்க்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஆன்மீக ஜொலிப்பை பார்க்கின்றேன்.  

கர்ம யோக பயிற்சி

நான் பாபாவுடன் அமர்கின்றேன், என்னை பற்றி என்னுடைய பார்வை முற்றிலுமாக மாற்றமடைந்துவிட்டது. முழுமையாக அந்த ரூபத்தில் இருப்பதற்கு என்னை நான் அனுமதிக்கின்றேன்.......அந்த ரூபத்தை அனுபவம் செய்ய, அந்த ரூபமாகவே வாழ மற்றும் அதுவாகவே இருப்பதற்கு என்னை நான் அனுமதிக்கின்றேன்.