Home

Diamond Dadi

Contact Us



9, மார்ச், 2015 தைரியம் கொண்டிருங்கள் பாபாவும் தாதியும் உதவி செய்வார்கள்

1990களின் தொடக்கத்தில் மியாமி குடும்பம், “ஒரு சிறந்த உலகத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு” திட்டத்திற்காக விழாவை கொண்டாடிகொண்டிருந்தது. பிலிப் மைக்கேல் தாமஸ் தியேட்டரில் சுமார் 400-பேர் அமர கூடிய அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்னை ஐந்து நிமிடங்கள் தியான வர்ணனை செய்யும்படி கேட்டு கொண்டார்கள். நான் இந்த ஞானத்தில் புதிதாக வந்திருந்த சமயம், நாலு பேருக்கு முன்னால் கூட ஒரு தியான வர்ணனை கொடுத்த அனுபவம் எனக்கு இல்லை, மற்ற யாராவது இதை நன்றாக செய்யமுடியும் என்று பல சாக்குபோக்குகளை நான் கூறினேன். ஆனால், சகோதரி வாடி நான் கூறும் எதையும் கேட்பதாக இல்லை. அந்த காரியத்தை நானே செய்ய வேண்டியதாக இருந்தது. என்னுடைய பதட்டத்திற்கு வலு சேர்க்கும் மற்றொரு விஷயம், தாதி ஜானகி பார்வையாளர்களில் ஒருவராக இருப்பது. புதிதாக இருப்பது, மேலும் தியான வர்ணனையை தாதி ஜானகி முன்பு பேசுவது, எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்து பார்க்க முடியுமா?

ஆமாம், இது செய்து முடிக்கபட்டது. நிச்சயமாக அது, பாபாவும், நானும் சேர்ந்து செய்தது. தியான வர்ணனை மிகவும் நன்றாக அமைந்துவிட்டது. அதன்பிறகு சகோதரி வாடி தாதியிடம் என்னை அறிமுகப்படுத்த வேண்டிய போதெல்லாம், "மியாமியில் உங்களுக்கு மிகவும் பிடித்த தியான வர்ணனையை செய்த சகோதரி." என்றே என்னை அறிமுகபடுத்துவார்.

இது நாள் வரை, நமக்கு தைரியம் இருக்கும்போது பாபாவிடமிருந்தும் தாதியிடமிருந்தும் உதவி கிடைக்கும் என்னும் இந்த அனுபவத்தை நான் பயன்படுத்துகின்றேன்.

விவேகமுடைய வார்த்தைகள்

நாம் எப்போதும் பாபாவின் குழந்தைகள் மற்றும் சகவாசிகள் ஆவோம், உங்களுடைய நினைவு தொடர்ந்து இருக்கட்டும். அனைத்தையும் பாபாவுடன் சேர்ந்து செய்யுங்கள். நீங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் மாயை உங்களை பிடித்துக்கொள்வாள். தனியாக இருக்காதீர்கள். ”என்னுடைய சகவாசியே, தயவு செய்து வாருங்கள்” என்று உங்களுக்கு அவசியம் ஏற்படும்போது பாபாவை கூப்பிடுங்கள். பாபா அங்கு இருப்பதற்கு உத்திரவாதம் கொடுக்கின்றார். உங்களின் தைரியமான ஒரு அடியானது, பாபாவிடமிருந்து ஆயிரம் மடங்கு உதவியை பெற்றுத்தரும்.

தேவையில்லாதது, பயம் மற்றும் ஆசைகள், துன்பத்தை கொண்டுவரும். நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடிப்படையில் தைரியம் என்பது அவசியம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாபா நினைக்கிறாரோ, அதை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்குள் வேலை செய்ய ஆரம்பிக்கும். சொக்க தங்கமாவதற்கு, நம்மை நாம் வளைந்துகொடுப்பவராக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

தைரியமும் நம்பிக்கையும் என்னை முன் நோக்கி செல்ல உதவிசெய்யும். பாதை தெளிவாகின்றது, அதன்பிறகு மற்றவர்களும் பின்தொடர முடியும். கவலைபடுவதற்கு பதிலாக, நல்ல காரியம் செய்யுங்கள். அதன்பிறகு தீய காரியத்திற்கு நேரம் இருக்காது. நான் யார்? நான் யாருக்கு சொந்தம்? நான் ஆத்மா, என்னுடைய தந்தை பரமாத்மா ஆவார். இதை தெரிந்துக்கொண்டு, நீங்கள் சந்தோஷத்தையும் லேசானத்தன்மையையும் அனுபவம் செய்வதோடு நல்ல காரியம் செய்வதற்கான சக்தியையும் பெறுவீர்கள்.

திருஷ்டிக்கான கருத்து

என்னுடைய இதயத்தை அனைத்து சக்திகள் மற்றும் வலிமையுடன் தொடர்பில் வைத்துக்கொள்கின்றேன். இன்று நான் தொடர்பில் வரும் அனைத்து ஆத்மாக்களுடனும் இந்த சக்திகளை பகிர்ந்துகொள்கின்றேன்.

கர்ம யோக பயிற்சி

ஆத்மாவாகிய நான் கடவுளின் சக்தியால் நிரம்பியிருக்கின்றேன். உலகத்தில் நான் மிக லேசாக ஆழமான அமைதியுடன் நகர்ந்து செல்கின்றேன். ஏனென்றால் என்னிடமிருந்து உலகம் எடுத்துக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. நான் பாதுகாப்பிலிருக்கின்றேன். நான் நேசிக்கப்படுகின்றேன். நான் விடுபட்டு இருக்கின்றேன்.