Home

Diamond Dadi

Contact Us



ஏப்ரல் 13, 2015

உன்னதமான தாதி

இந்தக் காட்சி ஆரம்ப நாட்களில் லண்டனில் நடந்தது. "இங்குச் சேவையில் அதிக நாட்டம் கொண்ட ஒரு தாய் இருக்கின்றார், அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கின்றார், ஆனால் அவருக்கு ஒரு ஆசிரியர் தேவைப்படுகின்றது", என்று தாதி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னால் தாதியின் அன்பை உணர முடிந்தது, மேலும் தாதி பேசும்போது அவரது கண்களில் ஒரு பிரகாசத்தை என்னால் பார்க்க முடிந்தது. அந்த நாட்களில் நான் எந்த வகையிலும் ஒரு ஆசிரியரும் அல்ல, எனக்குத் தியான வகுப்புகளை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்கவும் தெரியாது இருந்தது. ஆனால், தாதி என்னை அங்குப் போகச் சொன்னபோது, தாதியின் அன்பின் காரணமாக, என்னையும் நான் அறியாமல், “ஆம் நான் செல்கின்றேன் என்று நான் கூறுவதைக் கண்டேன். அப்பொழுது எனக்கு இரண்டாவது எண்ணம் தோன்றியது: "ஆனால் நான் பேசும் போது என் முழங்கால்கள் நடுங்கும், அது அமைதி பற்றிப் பேச்சாக இருக்காது!" என்று கூறினேன். அவர் என்னைப் பார்த்தார், பிறகு வெளியில் பார்த்தார். அதன் பிறகு மீண்டும் தாதி என்னைப் பார்த்து: அவரது உன்னதமான விரலால் என்னைச் சுட்டிக்காட்டி, "அவர்கள் உன்னைப் பார்க்க இல்லை! அவர்கள் பாபாவை பார்க்க வருகிறார்கள்!” என்று கூறினார். ஆகா! ஒரு மின்னல்வெட்டில், நான் வளர்த்திருந்த ஆணவம் மெல்லிய காற்றில் மறைந்துவிட்டது. நான் பேரின்பத்தில் அந்த இடத்திற்குச் சென்றேன். கடும் போக்குவரத்தினால் நான் அரை மணி நேரம் தாமதமாக சென்றபோதும்கூட, என்னுடைய போதை குறையவில்லை. சொல்வதற்கு அவசியம் இல்லாமல், சொற்பொழிவு கொடுக்க முடியாது இருந்த தாய், சொற்பொழிவு கொடுக்க ஆரம்பித்துவிட்டார் - அதை நான் மிகவும் அனுபவித்தேன்.

விவேகமான வார்த்தைகள்

எல்லாம் நமது புத்தியை சார்ந்திருக்கின்றது. நாம் ஒரு முற்றிலும் சுத்தமான புத்தியோடு வாழ்வோம் - எந்தக் கர்ம பந்தனமும் இல்லை, யாருடனும் எந்தக் கணக்கும் இல்லை, எதைப் பற்றியும் எண்ணங்கள் இல்லை. நமது வெற்றி விதிக்கபட்டிருப்பதில் நமக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது, அதற்கு உத்தரவாதம் இருக்கிறது. புத்தியானது, நாம் நிச்சயமாக வெற்றியாளர்கள் என்று கூறுகின்றது. சுயம், பாபா மற்றும் நாடகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பரிசை ஆத்மா பெற்றிருக்கின்றது. நாடகம் எவ்வாறு உங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வலிமையாக்குவது என்று காட்டுகிறது. ஆம், பெயருக்காக எனக்கு இந்த நாடகத்தில் ஒரு பாகம் இருக்கின்றது, இது என்னுடைய ஸ்திதியை, என்னுடைய நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை, வலுவாக்குகின்றது. நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே எனக்கு வேலை செய்திருக்கின்றன. ஒரு கருவியாக இருப்பதென்றால், நம்பிக்கையும் விசுவாசமும் வலிமையாக இருப்பதாகும்: பாபா தான் என்னை எல்லாம் செய்யத் தூண்டுகின்றார், மேலும் நாடகம் எனக்கு வெற்றியை கொண்டுவருவது நிச்சயிக்கபட்டிருக்கின்றது. தாதி அவரது புத்தியை பயன்படுத்துவதில்லை. அவர் புத்தி என்ன செய்கின்றது என்று சோதித்துபார்க்கின்றார். மேலும் அது மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்க்கின்றார். சிலரால் புத்தியை அமைதியாக வைத்திருக்க முடியாது உள்ளது.

பாபா அவருடைய மகாவாக்கியங்களில் கூறியிருப்பதுபோல் நடக்கிறது, மேலும் நீங்கள் அதைப் பார்கின்றீர்கள். இதைப் பார்ப்பதும் அனுபவம் செய்வதும் அதிர்ஷ்டம் தான். நாம் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. அவர் அனைத்தையும் செய்கின்றார்; அவர் அனைத்திற்கும் தூண்டுதல் கொடுக்கின்றார். நாம் அதை வெறுமனே நம்மை அனைத்தையும் செய்ய வைக்கும் கரங்கராவன்ஹாரை பார்த்துகொண்டு, தொடர்ந்து அனுபவம் செய்துகொண்டு, அதே நேரத்தில், நமது வாழ்கையைப் பயனுள்ளது ஆக்கி கொள்ள வேண்டும். உண்மையில், என் வாழ்க்கை இப்போது வெற்றிகரமாக இருக்கிறது என்பது உண்மையில் ஒரு கூற்று இல்லை, ஆனால் அது இனி என் கைகளில் இல்லை: அது பாபாவின் கைகளில் தான் இருக்கிறது. நாம் பாபா மடியில் பராமரிக்கப்படுகின்றோம். பாபா நம்மை அவரது சகவாசிகள் ஆக்கியுள்ளார். இது மிகவும் ஒரு அழகான யாத்திரை ஆகும்! வெளிப்படுகின்ற ஒரே ஒலி, அனைவரின் வாழ்க்கையும் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதாகும்.

திருஷ்டிக்கான கருத்து

பாபா என்னை அவரது பணியைச் செய்யவும், மேலும் உலகம் முழுவதும் சேவை செய்யவும் என்னைத் தேர்வு செய்திருக்கின்றார், என்ற நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன். நான் இந்தப் புரிதல் என்னிடம் கொண்டுவருகின்ற ஆனந்தத்தைப் பரவசெய்கின்றேன், மேலும் நான் இன்று சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவோடும் அந்தப் பேரின்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

கர்மயோகக் கருத்து

நான் இன்று எந்தப் பணியைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், நான் அனைத்து சக்திகளின் மூலத்தோடு இணைத்துக்கொள்கின்றேன், மேலும் வெற்றி நிச்சயம் என்பதை அறிவேன். மேலும், பாபா என்னுடன் இருப்பதால் அனைவருக்கும் அதில் நன்மை இருக்கும் என்றும் தெரியும்.