Home

Diamond Dadi

Contact Us



14 பிப்ரவரி, 2015

இதயத்தின் தூய்மையான ஆசை எப்போதும் நிறைவேற்றப்படுகின்றது

தாதி, பாபாவைப்போல் இதயத்தின் தூய்மையான ஆசையை நிறைவேற்றுகின்றார். நான் ஆக்ஸ்போர்ட்ல் இருந்தபோது, தாதி மூத்த சகோதரிகளுடன் வழக்கமாக உலாவ செல்வதை சன்னல் வாழியாக அடிக்கடி பார்த்திருக்கின்றேன். அவர்கள் கை கோர்த்தவாறு செல்வார்கள், இவர்களை இவ்வாறு பார்ப்பது ரொம்பவும் அருமையாக இருக்கும். தாதியுடன் நானும் ஒரு நாள் இவ்வாறு கை கோர்த்தவாறு நடந்தால் எவ்வளவு ஆழகாக இருக்கும் என்று சிந்தித்தேன்.

அது முடியாத காரியமாக தென்பட்டாலும், அதற்கான நாள் வந்தது. வியனா (நான் வசிக்கும் ஹங்கேரிக்கு அருகில் இருக்கிறது) விமான நிலையத்திற்கு தாதி வருகின்றார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. நான் விமான நிலையத்திற்கு தாதியை அழைக்க சென்றிருந்தேன். நான் அவரை பார்த்தவுடன், எதுவும் சொல்லாமலேயே, என்னுடைய கைகளை அவர் பிடித்துக்கொண்டார், விமான நிலையத்தில் நாங்கள் ஒன்றாக சேர்ர்ந்து நடந்தோம். அந்த உணர்வுகளை என்னால் வர்ணிக்கமுடியாது. நாங்கள் ஆழமான மௌனத்தில் நடந்தோம். நான் அதன்பிறகு பூமியில் இருந்தது போலவே இல்லை. காலவரையறையற்ற அந்த சில ஷணங்களை நான் மறக்கவே முடியாது.

விவேகமுடைய வார்த்தைகள்

பாபா அவருடைய மேன்மையான படிப்பினைகளில் என்ன கூறினாரோ, அது நடந்துக்கொண்டிருக்கிறது, நீங்கள் அதை பார்த்துகொண்டு இருக்கின்றீர்கள். இதை பார்ப்பதும் அனுபவம் செய்வதும் பாக்கியமாகும். நாம் வேறு எதுவும் செய்யவேண்டியது இல்லை. அவர் அனைத்தையும் செய்கின்றார்: அவர் அனைத்தையும் ஊக்குவிக்கின்றார். நாம் வெறுமனே அவற்றை தொடர்ந்து அனுபவம் செய்கின்றோம், செய்விப்பவரை பார்த்தவாறு, நம்மை அனைத்தும் செய்விக்கும் அந்த ஒருவரை, தொடர்ந்து அவரை பார்த்துவாறு, நம்முடைய வாழ்க்கை பெருமதிமிக்கதாக ஆகிவிட்டது. உள்ளபடி சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய வாழ்க்கை இப்பொழுது வெற்றிகரமாக இருக்கிறது என்பதை விட, இனி அது என்னுடைய கைகளில் இல்லை; ஆனால் அது பாபாவின் கைகைளில் உள்ளது. நாம் பாபாவின் மடியில் பராமரிக்கப்படுகின்றோம். பாபா நம்மை அவருடைய தோழராக்கி கொண்டிருக்கின்றார். இது அத்தனை அழகான யார்ர்திரை ஆகும்! வெளிப்படும் ஒரே சப்தமானது, அனைவரின் வாழ்க்கையும் இவ்வாறு இருக்கவேண்டும் என்பதாகும்.

நான் கடவுளை சந்திக்க வேண்டும், அவருடன் இருக்க வேண்டும் என்னும் எனது ஆசையானது, கடவுளுடன் இருக்க வேண்டும் என்னும் ஆசையின் அந்த உணர்வுகள் என்னுடைய ஒவ்வொரு மூச்சிலும் இருக்கவேண்டும். கடவுளை சந்திக்க வேண்டும், அவருடன் இருக்க வேண்டும் என்னும் இந்த உணர்வானது நீங்கள் தியானத்தில் அமரும்போது பலனை கொடுக்கும். கடவுளை கேளுங்கள்: நீங்கள் என்னை நேசிக்கின்றீர்களா? உண்மையில் என்னால் அவரில்லாமல் உயிர்வாழ முடியாது, நான் இல்லாமல் அவராலும் உயிர்வாழ முடியாது. பாபாவிற்கு அவரின் தோழராக, நீங்கள் வேண்டும்! கடவுளுக்கு சொந்தமாகுவதன் மூலமும், அவரை நமக்கு சொந்தமானவராக்கிகொள்வதன் மூலமும் நாம் புன்சிறுப்பு செய்ய கற்றுக்கொண்டோம். இப்போது ஞானத்தை கேளுங்கள், நல்ல முறையில் நீங்கள் அதை கிரகிக்கும் விதமானது, இதுவரை உள்ளுக்குள் மறைந்திருந்த துன்பம் அனைத்தும் அகற்றபட்டுவிடவேண்டும்.

திருஷ்டிக்கான கருத்து

ஆழகான ஒருவருடனும் இதயத்தின் நண்பருடனும் நான் நடக்கும்போது, இந்த இணைப்பின் அரவணைப்பை நான் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவிடமும் நான் பரவச்செய்கின்றேன்.

கர்ம யோக பயிற்சி

உங்களுடைய நாள் பொழுதில் பாபாவை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். உங்களுடைய ஒளிக்கரங்களை அவரின் ஒளிக்கரங்களில் வைத்து, ஆழகான ஒருவருடனும், இதயத்தின் நண்பருடனும், சாசுவதமான தோழருடனும் நீங்கள் நடந்துக்கொண்டிருகின்றீர்கள் என்ற விழிப்புணர்வுவை கொண்டிருங்கள்.