Home

Diamond Dadi

Contact Us



மே 18, 2015

ஆகத் தூய்மையான வைரம்

என்னைப் பொறுத்தவரை, தாதி உத்வேகத்தின் பெரிய ஆதாரமாவார். மேலும் எப்போதும் அருள்பவருக்கு, தாதி ஒரு மாபெரும் உதாரணம் ஆவார். வெறுமனே அவருடைய சகவாசத்தை நினைவு செய்தாலே, என் மனதில் இனிமையான நினைவுகள் வெள்ளபெருக்கெடுக்கின்றது. திடீரென்று, ஜூன் 2009 இல், நான் முதல் முறையாக நேருக்கு நேர் தாதியை சந்திக்க இருந்தேன் - அது கற்பனைக்கு எட்டாத வகையில், நிஜமாக முடியாது என்று நான் நினைத்த ஒன்று.

அந்த நேரத்தில், என்னுடைய முழு வாழ்க்கையையும் மாற்றிவிடக் கூடிய ஒரு பெரிய முடிவை நான் எதிர்நோக்கிகொண்டிருந்தேன். என்னுடைய தடுமாற்றமானது, இது ஒரு வாய்ப்பா அல்லது ஆத்மாவிற்கு ஒரு பெரிய பொறியா என்பதைத் தெரிந்துகொள்ளவதாகும். என் கதையை அறிந்தவர்கள் அனைவரும் பலதரப்பட்ட கருத்துக்களை வழங்கினார்கள், ஆனால் எந்த பதிலும் என் உள் முரண்பாட்டைத் தீர்க்க கூடியதாக இல்லை. நாடகம் தலையிட்டது, என்னுடைய உத்வேகத்தினுடன் முதல் முறையாக நேருக்கு நேராக் சந்திப்பு, தாதி கூறினார்: 'நீ பாபாவிற்குச் சொந்தம், இது தான் உண்மை’. அவர் பாபாவின் மோதிரத்தால் என் விரலை அலங்கரித்தார். உடனடியாக, என் மனம் அமைதியடைந்தது. என்னுடைய புத்தி இதயத்துடன் இணக்கமாக இருப்பதை உணர்ந்தேன். நான் எப்போதும் ஒரே ஒருவருக்குச் சொந்தம் என்று தெரிந்திருந்தது, ஆனால் தாதிக்கு இந்த ஆத்மாவின் மீது இருந்த பார்வையும் சிறிதும் அழியாத நம்பிக்கையும், அமரத்துவமான ஆசீர்வாதத்துடன் அழியாத முத்திரை போன்று வேலை செய்தது. தாதிக்குப் பாபாவிடம் இருந்த அன்பு எப்போதும் அவரிடம் என்னை ஈர்த்தது, ஆனால் இப்போது, அவருடைய நம்பிக்கை மற்றும் நிபந்தனையின்றி அருளும் முறையின் தரமும், என்னை இயல்பாகவே அவள் யாராக இருக்கின்றாரோ அவரிடம் அன்பு கொள்ளச் செய்தது. அவர் வைரங்களில் ஆகத் தூய்மையானவர்.

விவேகம் நிறைந்த வார்த்தைகள்

மூன்று வார்த்தைகள் இருக்கின்றன: விசுவாசம், நம்பிக்கை மற்றும் பாவனை. பாபா சமீபத்தில் சக்கார் முரளியில் சுயம், பாபா மற்றும் நாடகத்தின் மீது நம்பிக்கை பற்றிப் பேசியிருக்கின்றார். எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ, அங்குப் பாவனை இருக்கின்றது, அதன்பிறகு கேள்விகள் நின்றுவிடுகின்றது. பாபா நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும். . . பாபாவிற்கு நம் அனைவருக்காகவும் ஏதாவது விரும்பம் அல்லது நம்பிக்கை வைத்திருக்கின்றாரா? சாக்கார் பாபாவின் அனைத்து முரளிகளும் என் தலையிலும் இதயத்திலும் இருக்கின்றன. பாபா கூறிய அனைத்தும் நடைமுறையில் நடந்தது.

பாபாவின் ஒரு புத்திசாலியான குழந்தை, அவர்கள் நடந்தாலும் அமர்ந்தாலும் அல்லது உடலால் காரியங்களைச் செய்தாலும் ஒருபோதும் அவர்கள் யாருக்குச் சொந்தமானவர்கள் என்று மறப்பதில்லை. 'நான் யார்', 'நான் யாருக்கு சொந்தமானவர்' என்பவற்றை நமது விழிப்புணர்வில் வைத்திருக்கும் போது ஒர் ஆத்ம உணர்வு ஸ்திதி உருவாக்கப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு அதிகமான மகிழ்ச்சியைத் தருகின்றது. உங்கள் செயல்கள் எதுவாக இருப்பினும் அதில் ஞானமும் யோகமும் இருக்கின்றதா என்று பாருங்கள். நான் இந்தப் புரிந்துணர்வுடன் ஒவ்வொரு செயலையும் செய்கின்றேனா? இது கடவுளின் பணி, அது கடவுளின் வீடு மற்றும் நான் கடவுளின் குழந்தை.

நாடகத்தில் ஒவ்வொருவரின் பாகமும் பதிவு செய்யபட்டிருக்கின்றது. பாபா கூறுகிறார்: நாடகம். பாபா. ஒரு பக்கத்தில் பாபாவும் மறுபக்கத்தில் நாடகமும் இருக்கின்றது. அதனால் இந்த இரண்டும் என்னுடைய இரண்டு கண்களின் நட்சத்திரங்கள். பாபாவும் நாடகமும் என் இரு கண்களிலும் அமர்ந்திருக்கின்றார்கள். பாபா ஒரு கண்ணிலும் மற்றொரு கண்ணில் நாடகமும் என்று அல்ல. ஒருமுறை நான், பாபாவிடம், என்னுடைய ஒரு கண்ணில் சிவ்பாபாவும் மற்றொரு கண்ணில் பிரம்மா பாபாவும் இருக்கின்றார்கள் என்று கூறியபோது, ஏன் நீ இருவரையும் பிரிகின்றாய்? என்று பாபா என்னைக் கேட்டார். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இரண்டு கண்களிலும் அமர்ந்திருக்கிறார்கள். நாங்கள் இருவரும் இரண்டு கண்களிலும் நட்சத்திரங்களாக இருக்கின்றோம். எங்கள் பாகம் நாடகத்தில் அற்புதமாக இருக்கின்றது. உங்கள் சொந்த பாகத்தைப் பார்த்து, நீங்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். இது மிகவும் நல்ல அதிர்ஷ்டம்.

திருஷ்டிக்கான கருத்து

அன்றாடம் நாடகத்தில் இருக்கும் நிகழ்வுகளை எப்போதும் எனக்கு நன்மை செய்யும் வழியில் நடந்துக்கொண்டிக்கின்றது என்று பார்க்கின்றேன். நாடகம் என்னுடைய நண்பர். மேலும் என் வாழ்க்கையில் இருக்கும் எல்லோருக்கும் என்னுடைய கண்களில் அன்பும் விசுவாசமும் நிரம்பியிருப்பதை உணர்கிறேன்.

கர்ம யோகக் கருத்து

நான் ஒரு பாபாவிற்குச் சொந்தம் என்பதையும் ஆழமான நினைவின் மூலம் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளும் தீர்க்கப்படும் என்ற உணர்வை இருப்பதை நான் அறிவேன்.