Home

Diamond Dadi

Contact Us



23 மார்ச், 2015

உங்களால் பாடமுடியவில்லை என்றால், அது ஒரு விஷயமே இல்லை

லண்டனில் என் ஆரம்ப நாட்களில், சகோதரர்கள் சிலர்ஒலிக்கு அப்பால் என்ற ஒரு பாடல் குழுவை வைத்திருந்தார்கள். என்னைத் தவிர மற்ற அனைத்து சகோதரர்களும் இசைக் கலைஞர்கள் ஆவார்கள். பெரும்பாலும் தாதி என்னை, “என்னுடையவர் ஒரு சிவ்பாபா மட்டுமே வேறு யாரும் கிடையாது” (Mehra to ek Shiv Baba, doosra Na koy) என்று பாட சொல்லிக் கேட்பார். அதைக் கேட்கும் மற்றவர்களின் காதுகளை மகிழ்வித்தா தெரியாது, ஆனால் அது தாதியின் காதுகளை மகிழ்வித்தது போலும். உண்மையில் தாதிக்கு அது நன்றாக இருந்தாத என்பது பற்றிக் கவலை இல்லை, ஆனால் அவருக்கு என் இதயத்தில் நான் இந்த மந்திரத்தை பாட வேண்டும் என்பதாகும். இது உண்மையில் வேலை செய்தது. தாதியின் வாழ்க்கை, பாபா மீது முழு அன்பையும் கொண்டிருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஒரு முறை தாதி எனக்குத் திருஷ்டி கொடுத்து, கூறினார், " பாபாவின் அன்புதான் உன்னை நகரச் செய்கிறது, பாபாவின் அன்புதான் உன்னைக் களைப்பற்றவர் ஆக்கியுள்ளது, பாபாவின் அன்புதான், உன்னை அனைத்து தடைகளையும் கடக்க உதவியது என்று கூறினார். இறுதியாக அனைத்து ஞானத்தின் முடிவானது, முற்றிலுமாக அன்பானவர் ஆகிவிடுவது ஆகும். அன்பு என்னும் சாக்காஷ், வலிமை மற்றும் தைரியத்தால் என்னை நிரப்பி உள்ளது. தாதி பல விஷயங்களைக் கூறியுள்ளார், பல ஆண்டுகளில் பலவற்றைச் செய்திருக்கின்றார், அது என் இதயத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எதையும் விடத் தாதி எனக்குப் பாபாவை எவ்வாறு நேசிப்பது எனக்குக் கற்றுக்கொடுத்தார் என்று நினைக்கிறேன். தாதி, “இந்த விலைமதிப்பற்ற பரிசுக்கு நன்றி."

விவேகமுடைய வார்த்தைகள்

குடும்பத்தின் முக்கியத்துவம்: நான் ஒவ்வொரு முறையும் ஒரு ஆத்மாவை பார்க்கும் பொழுது, “இவர் என் பாபாவின் குழந்தை", என்று ஆழ்ந்த மகிழ்ச்சியால் நிரப்பட்டேன். இந்தத் தூய பார்வை உடனடியாக என்னுடைய ஸ்திதியை உயர்த்துகிறது. குடும்பத்திற்குச் சேவை செய்வதிலிருந்து வரும் மகிழ்ச்சியைத் தான், நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம். பாபா நம் மூலம், அவர் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்கின்றார், நாம் உலகச் சேவையின் பொருட்டுச் சேர்ந்துள்ளோம். பாபாவின் வழிக்காட்டல்களைப் பின்பற்றுவதில் ஒரு பெரிய சந்தோஷம் இருக்கிறது, அதில் நம் ஆணவம் வரமுடியாது. ஆத்மா, எளிமையாகவும் சுத்தமாகவும் இருப்பதன் மதிப்பு அறிந்துக்கொள்கிறது. கூடுதல் வசதிகள் தேவையில்லை, ஏனெனில், நாம் நம்முடைய இறுதி எண்ணங்கள் நம் இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்லவேண்டும் என்பதில் கவனம் வைத்திருக்கின்றோம். என்னுடைய மனம் பாபாவிற்கும் அவரின் சேவைக்கு அர்ப்பணிக்கப்படவில்லை என்றால், அதன் பின்னர் உடல் மற்றும் செல்வத்தைப் பயனுள்ள வழியில் பயன்படுத்த முடியாது. சரணடைவது என்பது ஒரு ஆழமான சன்ஸ்கார் ஆகும், அதில் ஆத்மா சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியமாகும். பாபா நமக்கு ஆத்மாவை புரிந்துகொள்ள மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் எவ்வாறு ஒவ்வொரு உடல் உறுப்பையும் நன்மை கொடுக்கும் வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நமக்குப் போதிக்கின்றார். அப்போது தான் உடல் உணர்வு முற்றிலுமாக நீக்கப்படமுடியும்.

நம்மிடம் எந்தப் பலவீனங்களும் மீதம் இல்லாமலும் தொடர்ச்சியான அன்பு சக்தியின் அனுபவம் இருக்குமளவிற்கு நம்மை நாம் பாபாவின் அன்பினால் நிரப்பிக்கொள்ளும்போது, உங்கள் முகமானது, மக்கள் உங்கள் முகத்தைப் பார்க்கும் போது அவர்கள் அதில் ஒரு அதிசயம் இருப்பதைப் பார்க்கமுடிகின்றது.

திருஷ்டிக்கான கருத்து

நான் மற்றவர்களையும் என்னையும் சுத்தமான மற்றும் தெளிவான பார்வையோடு பார்க்கிறேன். நான் வேறு எந்த ஆத்மாவை பார்க்கும் போதும், நான் உணர்வுடன் எங்களுக்கு இடையே இருக்கும் எந்தவிதமான வரலாற்றையும் விட்டுவிட்டு, புதிய கண்களோடு அவர்களைப் பார்க்கின்றேன். நான் அவர்களுக்கு உள் இருக்கும் தெய்வீக, புனிதமான, அன்பான ஒளியை பார்க்கிறேன். இந்தச் சுத்தமான பார்வை என்னுடைய அன்பு செய்யும் திறனை அதிகரிக்கிறது.

கர்ம யோகப் பயிற்சி

நான் செயல்களால் ஆன உலகில் நகர்ந்து செல்லும்போது, அன்பு கடலும் ஒளியும் என்னைச் சுற்றியும் என் மூலமும் பாய்வதையும் கற்பனை செய்து பார்க்கின்றேன். பாபா ஒரு கடலாக என்னைத் தூய பாசம் என்னும் இனிய அலைகளால் சுமப்பதை நான் நினைவு செய்கின்றேன்.