Home

Diamond Dadi

Contact Us



மே 25, 2015

அன்பைப் பொழிவது

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பி.கே. சகோதரியும் நானும் தாதியைச் சந்திக்கத் தயார் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், “தாதி என்னை அடையாளம் காணப் போவதில்லை என்று நான் நினைக்கின்றேன்” என்று நான் கூறினேன். “தாதி நிச்சயமாக உன்னை அடையாளம் கண்டுகொள்வார்கள்," என்று என் நண்பர் கூறினார். சில மணி நேரத்திற்குப் பிறகு நாங்கள் தாதியைச் சந்தித்தோம், நான் தாதியை நோக்கி அடியெடுத்து வைத்தேன். அவர் அருகில் வந்து, என்னை இறுக்கமாக கட்டி அணைத்து, "நீ ஒருபோதும் தாதிக்கு உன்னை அடையாளம் தெரியவில்லை என்று மீண்டும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து தர வேண்டும்”என்று என்னை வலியுறுத்தினார். 2013 ஆம் ஆண்டில், மனஅமைதி நிகழ்ச்சி விருந்தினர்களுக்கான ஒரு வகுப்பின் போது, தாதி என்னைப் பார்த்து, "தாதிக்கு உன்னை நினைவு இருக்கின்றது" என்று கூறினார். இந்தத் தருணங்கள் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. மேலும் அவை மிகவும் பொருள் பொதிந்தவை ஆகும். ஏனெனில், பாபாவின் ஒரு கருவியாக எவ்வளவு அன்பைப் பொழிய வேண்டும் என்பதை அது காட்டுகின்றது.

விவேகம் நிறைந்த வார்த்தைகள்

ஒரே ஒருவருக்கு அன்பு கொண்டு, தேவையற்ற / அவசியமில்லாததில் பற்றற்று இருப்பதன் மூலம் நான் துல்லியமாகச் சேவைச் செய்ய முடியும். நான் மாஸ்டராக இருக்கிற போது சேவை என்னை எதிலும் சிக்கவைக்க முடியாது. நான் கடவுளின் குழந்தை, என்னுடைய பிரசன்னம் சக்தியளிப்பதாகும். ஏன் என்னை நான் பலவீனமாக்கிக்கொண்டு வெளிப்புறச் சூழ்நிலைகளின் ஆதிக்கத்திற்கு வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்? உணவு எவ்வாறோ மனமும் அவ்வாறே, சகவாசம் எவ்வாறோ என்னுடைய நிறமும் அவ்வாறே. என்னுடைய சகவாசம் மற்றவர்களைப் பாபாவிற்குச் சொந்தமானவர்களாக ஆக்கி, பாபாவிற்குச் சமமாக மட்டுமே ஆக்கமுடியும். அமைதியாகவும் அன்பானவர்களாகவும் இருப்பதால், உண்மையாகவும் ராயலாகவும் இருப்பது நமது இயற்கையான சுபாவமாக ஆகமுடியும். இஃது உண்மையிலேயே இராஜ அந்தஸ்த்தையும் இராஜாங்கத்தின் அதிருஷ்டத்தையும் பெற்றுக்கொள்வதாகும்.

நாளை வரை எதையும் விட்டுவைக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை, இப்போது செய்யுங்கள். நீங்கள் உலகச் செய்தியைக் கேட்கின்றீர்கள், மேலும் எல்லா இடங்களிலும் நடக்கின்றது பற்றி அறிவீர்கள் - வெள்ளம், புயல், பூகம்பம் - சோகமும் அமைதியின்மையும் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றது, பல மக்கள் இறந்துக் கொண்டிருக்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியும். நான் தொலைக்காட்சிச் செய்தியைப் பார்க்கவோ கேட்கவோ இல்லை, ஆனால் நான் எப்போதும் உலகைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள அனைவருக்கும் சாக்காஷ் கொடுக்க வேண்டும் என்று உணர்கின்றேன். இந்த நேரத்தில், அனைவருக்கும் அன்பு, ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் சாக்காஷ் தேவைப்படுகின்றது. நமது பி.கே. குடும்பத்திற்கு இது தேவை, மற்றும் உலகத்திற்கும் அது தேவை ஆகும்.

இந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றோம். இந்த ஒருவர் பாப்தாதாவின் படிப்பினைகளைப் பின்பற்றுகின்றார், அவர் சேவைச் செய்கின்றார், மேலும் இவர் என் மூத்த சகோதரி, என் மூத்த சகோதரன். பாபா யாரோ ஒருவரைக் கருவியாக்கியுள்ளார். அதன்பின்னர் அந்தக் கருவிகள் இந்த ஆத்மாக்களை அந்த நிலையில் வைத்துள்ளார்கள். எனவே நாம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றோம்; நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதைப் புரிந்துக்கொண்டு இயற்கையான உணர்வுவோடு ஒருவருக்கொருவர் மரியாதைக் கொடுக்கின்றோம். பாபா நமக்கு நாடகம் பற்றி ஞானத்தைக் கொடுத்திருக்கின்றார், ஏனெனில் அனைவருக்கும் அவரவர்களின் சொந்தப் பாகம் இருக்கின்றது. அவர்கள் அந்தச் செயல்களைச் செய்கின்றார்கள், அதில் என்னுடைய தலையை நான் இடவேண்டியது இல்லை அல்லது அவர்கள் அவர்களின் செயல்களுக்குப் பலனை அனுபவிக்க வேண்டும் என்றும் நான் யோசிக்கவும் வேண்டாம்.

திருஷ்டிக்கான கருத்து

நான் ஒர் அன்பானவர் ஆவேன். நான் சந்திக்கும் அனைவரையும் அன்பான பார்வையுடன் பார்க்கின்றேன். என் கண்களிலிருந்து அன்புக் கதிர்கள் வெளிப்பட்டுச் சுற்றுசூழலை மரியாதை மற்றும் ஆதரவு என்ற வெள்ளத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொருவரும் மதிப்புமிக்கவரும் சமூகத்தின் நன்மைக்காகச் சிறப்பியல்பைக் கொண்ட முக்கியமானவர்கள் என்றும் தெரிந்து அன்புடன் பார்க்கின்றேன்.

கர்ம யோகக் கருத்து

நான் இந்த வாரம் நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பு ஒரு படிக் கூடுதலாக இருக்கும். இந்த நிறைந்து வழியும் அன்பு, அனைவருக்கும் ஏராளமாகக் கிடைக்கும் – அந்த அன்பு மூலமான கடவுளிடமிருந்து நேரடியாகப் பாய்வதனால் இதற்கு வரம்புகள் இல்லை.