BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY

 

ஓம் சாந்தி

 

தாதி ஜானகி வகுப்பு - 9 மார்ச் 2015 – ஞான சரோவர்

 

நாம் எங்கிருந்தாலும் பாபா நம்முடன் இருக்கின்றார்...

 

"நான் உன்னுடையவன், நீ என்னுடையவன்", என்று பாபா கூறுகின்றார். நான் யார்? என்னுடையவர் யார்? ஒளி வரும் போது ஒருவரால் பார்க்க முடியும், மேலும் சக்தியை எடுத்துக்கொள்ள முடியும். இந்த உங்களுடைய உணர்வாக இருக்கின்றதா? எனவே, இப்போது ஒளி வந்துவிட்டது. ஒளியின் மூலம் நாம் கனமில்லாமல் ஆகிவிட்டோம், மேலும் நம்மிடம் வெளிச்சம் இருக்கிறது - இதனால் சக்தி உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? அனைத்தையும் செய்து கொள்பவர், எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கின்றார். எனவே, அதன் பிறகு, நான் என்ன செய்ய வேண்டும்? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்? அவர் என்ன செய்கின்றார்? நான் என்ன செய்ய வேண்டும்?

 

நாம் இப்போது அனைத்து தெய்வீக குணங்களும் முழுமையாக நிறைந்தவர்கள் ஆக வேண்டும். இதில் நீங்களே உங்களை முழுமையாக சோதனை செய்து பாருங்கள். முழுமையாகும் தருணம் வந்துவிட்டது. அவர் நமது குறைகளை, அவரது போதனைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் நிரப்பி வருகின்றார். கடவுள் நமக்கு (perfect) முழுமை ஆவதற்கான தைரியத்தை கொடுத்திருக்கின்றார். அவர் நமக்கு அதிக அளவு உதவி செய்கின்றார். குழந்தைக்கு தைரியம் இருக்கும்போது தந்தை உதவி செய்கின்றார், அனைத்தும் எளிதாகிவிடும். இது இராஜ யோகமாகும், இதில், நாம் உண்மை என்றால் என்ன, மற்றும் ராயல் என்றால் என்ன என்று புரிந்து கொள்கின்றோம். (Reality and royalty) உண்மை மற்றும் இராஜ ரீகமானது, வேலையை தன்னால் முடித்து விடுகின்றதுஉண்மை மற்றும் இராஜ ரீகத்தின் மூலம் நமக்கு (realisation) புரிந்துணர்வு இருக்கிறது.

 

நமக்கு, ஞானம், யோகம், தாரணை மற்றும் சேவை என்றால் என்ன என்று தெரியும். நான்கு பாடங்களும் இப்போது நமக்கு எளிதாகிவிட்டன. நீங்கள் நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்பதை சோதித்து பாருங்கள். நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது, ஒரு பெரும் அதிர்ஷ்மாகும். உங்களுக்கு இந்த நான்கு பாடங்களிலும் நெருக்கமான கவனம் வைப்பதை விட இன்னும் முக்கியமான வேலை இருக்கின்றதா? அதன் பின்னர் பாபாவும்  நாடகமும் இருக்கிறது. இரண்டும் அற்புதமானவை ஆகும்.

 

நம்முடைய படிப்பு என்றால் என்ன? இந்த முழு படிப்பையும் ஒரு சொல்லில் கூறிவிடமுடியும் - மன்மனாபவ்; உங்கள் மனதை ஒருவரில் வைத்துவிடுங்கள். நம்முடைய மனம் இப்போது நம் உடலிலோ அல்லது செல்வத்திலோ இல்லை; அதிலிருந்து விடுபட்டுவிட்டது. அதன்பிறகு நடுவில் இருக்கும் ஒன்றை நினைவு செய்யுங்கள்-மத்யாஜிபவ்.

 

சிவ்பாபா, பிரம்மா பாபா வாய் மூலமாக அனைத்தையும் விளக்குகின்றார். பிரம்மா அமர்ந்திருப்பது காட்டபட்டிருக்கிறது. விஷ்ணு நின்றுகொண்டிருப்பது காட்டபட்டிருக்கிறது. ஷங்கர் நிராக்கார் ஸ்திதியில் காட்டபட்டிருக்கிறது. அந்த ஸ்திதியின் மூலம், விகாரங்கள் அழிக்கப்படுகின்றன. சிவ்பாபா, இந்த மூன்று ரூபங்கள் மூலம் அனைத்தையும் செய்துகொள்கின்றார்.

 

ஒவ்வொரு நாளும் பாபா நமக்கு யோகத்தில் புது அனுபவத்தை கொடுக்கின்றார். அந்திபொழுது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தியானம் அந்த நேரத்தில் மிகவும் எளிதானது. அமிர்தவேளை நேரத்தின், அனுபவம் தனிப்பட்டதாகும். மீண்டும், முரளி கேட்டுக்கும்போது, மற்றொரு விதமான அனுபவம், ஏனெனில் பாபா கற்பிகின்றார், நீங்கள் ஒரு மாணவர். எந்த இடத்தில் அமிர்தவேளை நேரமாக இருந்தாலும், அப்போதெல்லாம் நான் அங்கு இருக்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நாம் அமிர்த வேளையை அல்லது மாலை தியானத்தை தவறவிடக்கூடாது. நாம் உலகில் எங்கிருந்தாலும், அந்த நேரங்களில் நம்முடன் பாபா இருக்கிறார்.

 

ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் யார் தரகர் ஆனார்? பிரம்மா பாபா தரகரானார், அதன்பிறகு நம்மையும் தரகர்கள் ஆக்கினார். ஆத்மா தட்டுதடுமாறிக்கொண்டு இருந்தது. இதயத்தில் பல சிக்கல்கள் இருந்தன. ஆத்மா நான்கு பாடங்களிலும் கவனம் செலுத்தும் போது இதயம் தூய்மையாகவும் உண்மையாகவும் ஆகின்றது. அதன்பிறகு நீங்கள் தூய கர்மா செய்ய முடியும். இப்போது ஒரு சரியான சம்பூர்ணமான ஸ்திதியை உருவாக்க எந்த தடைகளும் இருக்க கூடாது. கடவுள் நம்முடைய துணைவன் ஆவார்; எனக்கு தேவையானது தைரியமும், ஊக்கம் மற்றும் உற்சாகமும் ஆகும். நீங்கள் சிறிதளவு கவனக்குறைவுடன் இருந்தால் கூட, சம்பூர்ணமான ஸ்திதியை உங்களால் உருவாக்க முடியாது, ஏனென்றால் அப்படிபட்ட ஸ்திதியை உருவாக்க, கவனம் தேவை ஆகும்.

 

சில ஆத்மாக்கள் கர்ம யோகிகளாக இருக்கின்றனர்; அவர்கள் நினைவில் நிலைத்திருக்கின்றார்கள், ஒரு நல்ல ஸ்திதியை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைவை ஒரு இயற்கையான ஸ்திதியாக வைத்திருக்கிறார்கள், அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களை நினைவில் நிலைநிறுத்திக்கொள்ள அவசியம் இல்லை. இப்போது (accurate) துல்லியமாக இருந்து சிந்தனை அளவில் வெற்றியை அனுபவம் செய்யுங்கள். அதன்பிறகு நீங்கள் செய்ய கூடிய காரியமானது மற்றவர்கள் வியக்குமளவிற்கு இருக்கும். இது சுலபமானது; நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் எண்ணங்களில் நீங்கள் பாபாவை வைத்திருக்கவேண்டும்.

 

ஓம் சாந்தி