தாதி ஜானகி - 25 பிப்ரவரி 2015 - கியான் சரோவர்

என்னுடைய வாழ்க்கையில் முரளி இருக்கிறதா?

நான் யார்? என்னுடையவர் யார்? ... இதுதான் சாரம். நான் என்னைப் பற்றி நினைக்கும் போது, ஆத்ம உணர்வில் இருக்க வேண்டும். என்னுடையவர் யார் என்பதை நினைக்கும் போது, நான் சக்திசாலி ஆகின்றேன். ஒன்று, சக்தி எனப்படுவது, இரண்டாவது ஆற்றல் எனப்படுவது, மூன்றாவது பலம். நாம் யோக சக்தியை பற்றிப் பேசுகின்றோம். பாபாவுடன் யோகம் செய்து சக்தி பெறுவதற்கு நல்ல இணைப்பு (connection) இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் விடுபட்டு இருக்கின்றோமோ (detached) இந்த அளவிக்கு நாம் பாபாவால் நேசிக்கப்படுவோம். நாம் விடுபட்டு இருக்கவில்லை என்றால் பாபாவின் அன்பு நம்மை முழுமையாக அடையமுடியாது. பழையவற்றின் துறவு (renunciation) இருக்கும்போது, ஆத்மா பாபாவிடமிருந்து அதிகமான சக்தியை பெறுகின்றார். நான் பாபாவிற்குச் சொந்தம், அவர் எனக்குச் சொந்தம்.

நம்முடைய அனைத்து உறவுமுறைகளும் ஒருவருடன் தான். இது நடைமுறையானது. அவர்தான் தாய், தந்தை, ஆசிரியர், நண்பர் மற்றும் உண்மையான வழிக்காட்டி (guide) ஆவார். நாம் பாபாவை தாய் ருபத்தில் பார்த்தால் நமக்கு அன்பு கிடைக்கும். தந்தை இடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கும். சற்குரு இடமிருந்து நமக்கு முக்தி மற்றும் ஜீவன் முக்தி கிடைக்கும். பாபா நம்மைத் தமக்குத் தாமே சொந்தமாக்கி கொள்கின்றார். அனைத்துத் தவறுகள் செய்வதிலுருந்தும் விடுவிக்கின்றார். அவர் கடந்த காலத்தை மறந்து, அவரை மட்டுமே நினைவு செய்யச் சொல்கிறார். அவர் நமக்குக் கொடுக்கும் ஸ்ரீமத்தை நம் தலைக்குமேல் வைத்து, அதைப் பின்பற்றுகின்றோம்.

 

ஆத்மாவின் மீது கடவுளுக்கு இருக்கும் அன்பு, ஆத்மாவிற்குக் கடவுள் மீதிருக்கும் அன்பு, அதைப் பற்றிப் பேச முடியாது. அன்பை நம்மால் விவரிக்க முடியாது….

நான் உங்களை நேசிக்கின்றேன்இந்தச் சொற்றொடர் விவரிக்க முடியாதது. இதை ஒரு  இதயம் வடிவத்தில் காட்டலாம். பாபாவை மூன்று ரூபங்களில் சேர்ந்து நான் பார்க்கிறேன்;  சாகாரம், தேவதை மற்றும் நிராகார். நீங்களும் இந்த மூன்று ரூபங்களில் பார்க்கின்றீர்களா? நாங்கள் பாபா சாப்பிடுவதைப் பார்த்த போது எங்களால் அவரிடம் பேச முடியவில்லை. பாபாவை நாம் அறிந்துகொண்டு (recognise), தெரிந்துக்கொண்டு (know), ஏற்றுகொள்ளும்போது (accept) நம் வாழ்க்கையில் மாற்றம் ஏறப்பட முடியும்.

நீங்கள் மதுபனிற்கு வருகின்றீர்கள், அதன் பின் நீங்கள் திரும்பிச் சென்று கருவிகளாகச் சேவை செய்கின்றீர்கள். இது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இதில் மகிழ்ச்சியும் இன்பமும் (pleasure) இருக்கிறது. நமக்குத் தெளிவு இல்லாத விஷயங்களுக்கு மதுபனில் தெளிவு கிடைக்கும். உடலில் முக்கியமான இரண்டு உறுப்புகள் - இதயமும் மூளையும் ஆகும்.

நமக்கு இது சூட்சும உலகில் இருக்க வேண்டியதற்கான நேரம் ஆகும். ஸ்தூலமான விஷயங்களில் ஆழமாகப் போக வேண்டாம். அது ஆத்மா வீட்டிற்குத் திரும்ப வேண்டிய நேரம் ஆகும்; இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய செல்வம் மற்றும் ஸ்தூல பொருட்களின் உணர்விலிருந்து விடுப்பட்டு இருக்கின்றீர்களா? புத்தியின் யோக சக்தியானது நம்மை முன்னோக்கி செல்ல வைக்கின்றது, அதை அடைவதற்கு ஆத்மா விடுபட்டு (free) இருக்க வேண்டும்.

உலகச் சேவையானது முரளியில் இருக்கும் வழிக்காட்டல்களின் அடிப்படையில் நடந்துள்ளது. பாபா எவ்வாறு இருக்கின்றார், அவர் என்ன செய்கின்றார், என்ன செய்ய நம்மைத் தூண்டுகின்றார் என்பது உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். நாம் உண்மையில் எதையும் செய்யவில்லை; பாபா அவரது பணியை நம் மூலம் செய்து கொள்கின்றார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எனக்குத் தூண்டுதல் அளிக்கின்றார். இது ஒரு தனிப்பட்ட விஷயம் ஆகும், அதனால் நாம் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்ககூடாது. முரளி முழுவதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா என்று உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். நாம் மூன்று இரத்தினங்களைக் கண்டுபிடித்திருக்கின்றோம்; பாபா, முரளி மற்றும் மதுபன். நாம் அனைவரும் மதுபன் வாசிகள் ஆவோம். நாம் மதுபன் வாசிகள், அதன் கூடவே சூட்சும வதன வாசிகளும் ஆவோம். நம்முடைய வீடு பரம்தாமம் ஆகும். நமது செயல்கள் மிகவும் சூட்சுமமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்து மற்றவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

 

கவனித்துக்கொள்வது, பகிர்ந்துக்கொள்வது மற்றும் ஊக்குவிப்பு அளிப்பது நமது வேலை ஆகும். நான் பாபாவிடமிருந்து பெற்ற சந்தோஷத்தை தான் பகிர்ந்து கொள்ள முடியும். என்னுடைய சந்தோஷமானது என் முன் வருகின்ற மற்றவர்களின் துக்கம் அகன்றுவிடுவதாக இருக்க வேண்டும். நான் ஒருபொழுதும் துக்கத்தை அனுபவிக்க வேண்டியிராத அளவிற்கு, எனக்குள் அவ்வளவு சக்தி இருக்கவேண்டும். என்னுடைய முகம் ஒருபொழுதும் துக்கத்தைக் காட்டுவதாக இருக்ககூடாது. ஒரு மகிழ்ச்சியான முகம், ஒரு அழகான அலங்காரம் ஆகும். என்னுடைய குணாதிசயத்திலோ (character) அல்லது என் வாழ்க்கையிலோ எந்த பதற்றமும் இல்லாதவாறு என் மீது நான் கவனம் கொள்ளவேண்டும். இதில் உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். நாம் மூன்று ரூபங்களை ஏற்பவர்களாக இருக்க வேண்டும்; பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கர்.

 

இப்போது தெய்வீக குணங்கள் என்றால் என்ன குறைபாடுகள் என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். பேசும்போதும் நடிக்கும்போதும் ஆத்மாவின் நற்பண்புகள் பார்க்க கூடியதாக இருக்கிறது. பாபா நமக்குக் கற்பிக்கிறார், நாம் அந்தப் போதனைகளைக் கிரகித்து நம் வாழ்க்கையில் அவற்றைக் கொண்டு வர வேண்டும். ஒரு பாபாவை கொண்டிருப்பதன் மூலம் ஆத்மா வெற்றி அடைகின்றது. ஒரு தோட்டத்தில் இருக்கும் பல வகைகள் மலர்களைப் போல் ஒவ்வொருக்கும் தங்களுக்கென்று சொந்த பண்புகளும் சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன.

நம்பிக்கை வெற்றியை கொண்டு வருகிறது. பாபா நமக்கு இந்த நாடகம் 5,000-ஆண்டுகளுக்குக் கொண்டது என்று ஞானத்தைக் கொடுத்திருக்கின்றார். அது அனாதியாக மீண்டும் நடைபெறுகிறது. நாம் இப்போது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று உணரும் விதத்தில் நாம் ஞானத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது சத்யுகத்தைக் கொண்டுவரும் அந்தக் காட்சி ஆகும். ஆத்மாக்களாகிய நாம் விடுபட்ட நிலையில் அன்பாக (detached & loving) இருக்கும் சுபவங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். நாம் அன்புடன் உணவு தயாரித்து, அதை அன்புடன் பரிமாறுகின்றோம். மேலும் அன்புடன் அதைச் சாப்பிடுகின்றோம். இது சத்யுகத்திற்கான சுபாவங்களை உருவாக்கிக் கொள்வதாகும். யாரும் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டியதாக இருக்கக் கூடாது. அனைத்தையும் நான் சிக்னல்கள் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். சத்யுகத்தில் நாம் யோக சக்தியின் மூலம் பிறவி எடுப்போம். ஒருவர் யோகம் செய்யவில்லை என்றால் அவர்கள் யோக சக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ளமுடியாது. அவர்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படிப் பிறப்பார்கள் என்பது பற்றிக் கேள்விகள் கேட்பார்கள்.

எனக்கு எங்கிருந்து ஆற்றல் (energy) கிடைக்கிறது என்று சில நேரங்களில் மக்கள் என்னைக் கேட்கின்றார்கள். நீங்கள் உங்கள் நேரம், பணம் மற்றும் ஆற்றலை கவனமாகப் பயன்படுத்தினால் அதன் பின்னர் நீங்கள் ஆற்றலை சேர்த்து வைக்கின்றீர்கள். நான் எனக்குச் சக்தி இல்லை என்ற நிலையை நான் ஒருபோதும் அடைய கூடாது.  தர்மராஜ் எனக்கு ஒரு கடுமையான பார்வையைக் காட்டவேண்டிய அளவிற்கு நான் எந்தத் தவறும் செய்யக் கூடாது. கடவுள் எந்தத் தண்டனையையும் கொடுப்பதில்லை, ஆனால் என்னுடைய செயல்களினால் உண்டாகும் விளைவின் தரமானது தண்டனை உணர்வை கொடுக்கின்றது. நீங்கள் 100-நல்ல செயல்களைச் செய்யலாம், ஆனால் நீங்கள் ஒரு தவறான செயலை செய்தால் அந்த 100-நல்ல செயல்களும் அழிந்து போகும். நாம் உருவாக்கும் சூழலானது நம்மை யார் சந்திக்க வந்தாலும், அவர்கள் அந்தச் சூழலை பற்றிக்கொள்ளகூடியதாக இருக்க வேண்டும். பாபாவின் ஞானமானது வெறுமனே படித்தும் எழுதியும் புரிந்து கொள்ள கூடியது அல்ல.

நான் பலவீனமான இயல்பை கொண்டிருக்கக்கூடாது. என்னுடைய பழைய இயல்பு அல்லது சுபாவத்தின் பாதிப்பின் கீழ் நான் இருக்கக் கூடாது. நீங்கள் பலசாலி ஆகிவிட்டீர்களா? உங்களுடன் வசிப்பவர்கள் வலுவானவர்களாக ஆகவிட்டார்களா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: கடவுள் ஒரு நேர்மையான இதயத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். உங்களுக்குத் தைரியம் இருந்தால் நீங்கள் தந்தை இடமிருந்து உதவி பெறுவீர்கள். ஒப்பிட்டுப் பார்ப்பதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இரண்டு ஆத்மாக்கள் ஒரே மாதிரி இருக்க முடியாது. சண்டையில் ஈடுபடாதீர்கள். அமைதியாக இருங்கள்,  நீங்கள் சேவை செய்வீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் நீங்கள் பேசும் போது,  நீங்கள் சேவை செய்வீர்கள். உங்கள் முயற்சியில் சிறப்புத் தேர்ச்சி (Pass with honours) பெறும் நோக்கம் வைத்திருங்கள்.

ஓம் சாந்தி