தாதி ஜானகி - 26 பிப்ரவரி 2015 - கியான் சரோவர்

கீழ்படிதல், நம்பிக்கைக்குறிய மற்றும் விசுவாசமான…..

சிலர் இங்கே வகுப்பில் அமர்ந்துக்கொண்டு இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். உங்கள் காதுகள், உங்கள் கண்கள் அல்லது உங்கள் வாய்? எது அதிகமாக வேலை செய்கின்றது? கண்களை திறந்து, முன்பக்கமாக பார்த்து கொண்டு சிவ்பாபாவை நினைவு செய்யவேண்டும் என்று பாபா எங்களுக்கு கற்று கொடுத்தார். நாங்கள் ஒளியை பார்த்தோம். ஒளி எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கும் சாக்கார் முரளிகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளது. நாடகம் பற்றிய விஷயம் மிகவும் தெளிவாக உள்ளது. இவை பாபா சாக்கார் ரூபத்தில் இருந்த போது, கடைசி 5 ஆண்டுகள் முரளிகள் ஆகும்.

முதலில் பாபா நான்கு யுகங்களை பற்றி பேசினார்……..கலியிகத்தின் அழிவு மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்தை பற்றி பேசினார். முதலில் பேசிய முரளிகள் அச்சிடப்பட்டவில்லை. சில வருடங்களுக்கு பிறகே அச்சிடுவது தொடங்கியது. நான் lytho இயந்திரத்தை பார்க்க சென்றேன், பாபாவிற்கு ஒரு சில முரளி பிரதிகளை கொடுத்தேன். பாபா மிகவும் சந்தோஷப்பட்டார். நமக்கு முரளி, மிகவும் முக்கியமானதாகும்...

ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தோம் என்பது நமக்கு தெரியும். அப்போது, ஏஜன்ட் யார்? எந்த தரகருக்கு அதிகமான லாபம் கிடைக்கும். பிரம்மா பாபாவிடம் அதிகமான ஈர்ப்பு இருந்தது. சிவ்பாபா மந்திரவாதி ஆவார். முரளியில் மந்திரம் இருக்கிறது. அவரது முரளியை தவிர வேறு எதுவும் கேட்க நமக்கு விருப்பமில்லை, மிகவும் அழகாக இருக்கிறது. நாம் முரளி கேட்கின்றோம், அதன்பிறகு, நாம் அன்புடன் பாபாவின் ஞானத்தை பேசுகின்றோம்.

 

உங்கள் மனம் அமைதி அடைந்துவிட்டது இல்லையா? புத்தியானது  ... எங்கு போக முடியும்? நாம் இந்த உலகத்தில் கேட்பதை பற்றியும் பார்பதை பற்றியும் யோசிக்க வேண்டுமா அல்லது நாம் பாபா சொல்வதை பற்றி யோசிக்க வேண்டுமா? என்ன சேவை நடந்துள்ளதோ அது பாபாவின் சமிக்கைகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது: ஒர் ஈர்ப்பு உள்ளது.

கீழ்படிதல், நம்பிக்கைக்குறியவராக இருப்பது மற்றும் விசுவாசமானவராக இருப்பது. நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்களா? நம்முடைய உறவுமுறைகளில் நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; பற்றும் இல்லை கவர்ச்சியும் இல்லை - பகையும் இல்லை. கீழ்ப்படிந்துள்ள ஒருவர் பாபா கூறும் அனைத்தையும் செய்கிறார்.  இத்தகைய ஒரு ஆத்மா பாபா எதை கூறினாலும் ஏற்றுக்கொள்கின்றார். நம்பிக்கைக்குறியவராக இருக்கும் ஒருவர் ஒவ்வொரு ரூபாய்க்கு அக்கறை எடுத்துக்கொள்வார். இத்தகைய ஒரு ஆத்மா பாபாவிடம் அனைத்து உறவுமுறைகளையும் கொண்டிருப்பார்; இந்த ஆத்மா உடல் சார்ந்த எந்த உறவையும் கொண்டிருக்கமாட்டார். உங்களை நீங்களே இதில் சோதித்து பாருங்கள். ஒருமுறை யாரோ ஒருவர் ஓரளவு பணம் கொடுத்தார்கள். அதை வைத்து என்ன செய்யலாம் என்று நான் பாபாவிடம் கேட்டேன். பாபா தாதி பிரகாஷ்மணிக்கும் தாதி சந்திரமணிக்கும் கும்பமேளாவிற்கு அதை அனுப்பி வைக்கும்படி என்னிடம் கூறினார். என்னுடைய வயிறு எப்போதும் பாபாவின் உணவு மூலம் நிறைந்திருக்கும் என்று என்னிடம் கூறினார்.

நிகழ்காலம் என்பது ஒரு பரிசு வடிவில் நம்மிடம் இருக்கிறது. நிகழ்காலத்தில் இருப்பதென்றால், எப்போதும் பாபாவின் முன் இருப்பதாகும். நான் மற்றும் எனது என்னும் உணர்விலிருந்து நாம் விடுபடவேண்டும். நீங்கள் விடுபட்டுவிட்டீர்களா அல்லது ஆணவத்தின் சுவடு இன்னமும் உங்களிடம் இருக்கிறதா? எவ்வித்திலாவது ஆணவம் உள்ளுக்குள் இருக்கின்றதா? உங்களின் புத்தி கூர்மை, தோலின் நிறம் அல்லது வேறு எதையாவது பற்றி இன்னமும் ஆணவம் இருக்கின்றதா?

ஆரம்ப நாட்களில் நாங்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தோம். லண்டனில், நாங்கள் ஒரு பழைய கதவை, நாள்பொழுதில் கதியாக பயன்படுத்தினோம், இரவில் ஒரு படுக்கையாக பயன்படுத்தினோம். தாதி இரவில் கதவின் மீது தூங்குவது வழக்கம். நாம் உலக இராச்சியம் என்னும் அதிர்ஷ்டத்தை பெறுகின்றோம். நீங்கள் வேறு எங்கும் அதை பெறமுடியாது. மன்மனாபவ் - இப்போது ஒருவர் மீது உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். உள்ளூர நாம் பிரம்மா பாபாவை போல் இருக்க வேண்டும் – ஒரு தபஸ்வி மற்றும் சேவையாளர். நீங்கள் ஒரு துறவை மேற்கொண்டவரா? நீங்கள் துறவு கொண்டீர்கள் என்றால், உங்களால் தபஸ்யா செய்ய முடியும். 

 இப்போது மிக குறைந்த நேரமே மீதமுள்ளது. அழிவு எந்த நேரத்திலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் பெரும் வெள்ளம் ஏற்ப்பட முடியும். உடலும் ஸ்தூல உலகமும் ஐந்து தத்துவங்களால் ஆகியிருக்கின்றது. 5-தத்துவங்கள் தமோபிரதானம் ஆகிவிட்டன. ஆனால் வினாசத்தின்போது அவை சதோபிரதானமாகிவிடும். நாம் ஒர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் – உடலுக்கு அப்பால் நாம் இருக்க வேண்டும். நாங்கள் - பாபா நெற்றியில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தை, ஆத்மாவை பார்ப்பதுண்டு. இதயம் உண்மையாக இருக்கும் போது, நெற்றி பிரகாசிக்கின்றது. நமக்கு தைரியமும் உற்சாகமும் இருக்கவேண்டும். ஆத்மா தைரியத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும்போது பாபாவிடமிருந்து நூறு மடங்கு உதவியை பெறும். நேர்மையான இதயம் கொண்ட ஆத்மாவிற்கு பாபா உதவி செய்கின்றார்.

சேவை செய்வதற்கான உற்சாகம் கொண்டிருக்கும்போது நல்ல ஆரோக்கியம் இருக்கும். எனக்கு எந்த அந்தஸ்தும் மரியாதையும் தேவையில்லை. எனக்கு என்ன வேண்டும்? தூய்மை, பொறுமை, சத்தியம் மற்றும் பணிவுத்தன்மை. முழுமை அடைய காலம் பிடிக்கும், ஆகவே பொறுமை அவசியம். பணிவுதன்மையும் அவசியம். அதன் பின்னர் இனிமை வருகின்றது; இனிமையான வார்த்தைகளை பேசுங்கள். நாம் பாலும் தேனும் போன்று ஒன்றாக வாழ வேண்டும்…. நம்முடைய வார்த்தைகளில் இனிமையும் பணிவுத்தன்மையும் நிறைந்திருக்க வேண்டும். இதை செய்து பாருங்கள், மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பத்தோடு மட்டுமல்லாமல் நீங்களும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். 

 

உங்களை கீழ்படிந்தவராக, நம்பிக்கைக்குறியவராக மற்றும் விசுவாசமானவராக ஆக்கிக்கொள்ளுங்கள். இப்போது எச்சியிருப்பது கொஞ்சம் காலம்தான். உங்களிடமே நீங்கள் ஒரு சத்தியத்தை செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் பல மில்லியன் மடங்கு அதிர்ஷ்டம் உடையவர்களாக உங்களை ஆக்கிக்கொள்வீர்கள். நீங்கள் பாபாவின் கண்மணியாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் பாபாவின் அன்பையும், பராமரிப்பையும் பெறும் உணர்வு பெறுவீர்கள். உங்கள் நடத்தையும் பேச்சும் இப்போது நீங்கள் ஒரு பிராமணரிலிருந்து தேவதையாக மாறிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை காட்டுவதாக இருக்கவேண்டும்.

 

ஓம் சாந்தி